×

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் பாஜக நிர்வாகி அலெக்ஸ் விசாரணைக்கு ஆஜர்..!!

சென்னை: ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் பாஜக நிர்வாகி அலெக்ஸ் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். ரூ.2,438 கோடி மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அலெக்ஸ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது, சம்மனை ஏற்று பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியான அலெக்ஸ் விசாரணைக்கு ஆஜரானார்.

பாஜக நிர்வாகிகள் மீதான புகார்கள் என்ன?

பாஜகவில் மாநில பொறுப்பு வழங்குவதாகக் கூறி ஆருத்ரா நிறுவன நிர்வாகிகளிடம் பாஜக நிர்வாகிகள் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. பாஜகவில் பதவி பெறுவதற்காக பணம் கைமாறியதா என்பதை கண்டறியவே விசாரணை நடைபெற்றது. ஏற்கனவே ஆருத்ரா நிறுவனத்திடம் இருந்து பாஜகவைச் சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ. 15 கோடி பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் ஆர்.கே.சுரேஷும் விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டுள்ளனர். ஆருத்ரா நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை தீவிரமடைந்துள்ளதால் மோசடியில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் சம்மன் அனுப்பியதை எதிர்த்து நோட்டீஸ் அனுப்பியிருந்த அலெக்ஸ், விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

The post ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் பாஜக நிர்வாகி அலெக்ஸ் விசாரணைக்கு ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : Ajar ,BJP ,Alex ,Aruthra Gold Trading Company ,Chennai ,Aruthra Gold Trading ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...